ஜூலை 27 முதல் காவலர் உடல் தகுதித் தேர்வு 15 இடங்களில் நடைபெறுகிறது*
காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜூலை 27- ஆம் தேதி முதல் தமிழகத்தில் 15 இடங்களில் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்த விவரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காவல்துறையில் உள்ள 13137 இரண்டாம் நிலைக் காவலர்கள், 1015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், 1512 தீயணைப்புப் படை வீரர் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 21- ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 410 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்கு 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.