இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலிருந்தவாரே கண்காணிக்கும் புதிய மருத்துவத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதய நோய்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அதை குணப்படுத்தவும் அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கவும் பயன்படும் இந்த புதிய கருவி பற்றிய விவரங்கள்:
மாறி வரும் உணவுப் பழக்கங்களினாலும் வாழ்க்கை முறையினாலும் இளம் வயதினர்கூட இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் அதனை முன் கூட்டியே கண்டறிவது கடினம் என்பதுதான்.