
தேவைகள்: யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது
நிரம்பியவராகவும் 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.02.1992க்கு பின்னரும் 31.01.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் 3 வருட சலுகை எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு மூன்று வருட காலம் படிக்கக் கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோவை மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம் குறைந்த பட்சம் 157 செ.மீ.,யும், இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். நல்ல கண் பார்வை, கேட்கும் திறன், உடல் நிலை போன்ற அம்சங்களும் கட்டாயம் தேவைப்படும்.
ஏனைய தகவல்கள்: கடலோரக் காவல் படையின் மேற்கண்ட காலி இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட இதர தேர்ச்சி முறைகளின் வாயிலாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை தமிழத்தின் சென்னை உள்ளிட்ட நாட்டின் 8 மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம். இந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 22.07.2013
இணையதள முகவரி: www.joinindiancoastguard.gov.in/pdf/Full%20page%20yantrik%2001%202012.pdf
No comments:
Post a Comment