விஜயா வங்கி

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். 1–3–13 தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
முப்படைகளில் ஏதேனும் ஒரு பிரிவில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகாரி தரத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். காவல் துறையில் அசிஸ்டன்ட் சூப்பிரண்டன்ட், டெபுடி சூப்பிரண்டன்ட் போன்ற தரத்திற்கு குறையாத பொறுப்பில் 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி.,எஸ்.டி பிரிவினர் ரூ.50 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை 5–5–13 தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப நகல் 13–5–13 தேதிக்குள் கிடைக்கும்படியாக அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்கவும் விவரங்களை அறியவும் www.vijayabank.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment