இந்தியாவின் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் பிரதானமானது. இந்தப் படை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் ஊடுருவல் நிலவியதன் விளைவாகவே அதனைத் தவிர்ப்பற்காக நிறுவப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் இயங்கிவரும் இந்தப் படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பதவியில் உள்ள 247 டெக்னிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகளும் காலி இடங்களும் : பி.எஸ்.எப்.,பின் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் மரைன் பிரிவில் எஸ்.ஐ.,-மாஸ்டர் பிரிவில் 13 இடங்களும், எஸ்.ஐ.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 13 இடங்களும், எச்.சி.,-மாஸ்டர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.-ஒர்க்-ஷாப் பிரிவில் டீஸல் மெக்கானிக்கில் 3, கார்பெண்டரில் 5, மெஷின்ஸ்டில் 1, ஏ.சி., டெக்னீசியனில் 4, எலக்ட்ரீசியனில் 1, அப்-ஹோல்ஸ்டரில் 1, சி.டி., க்ரூவில் 80 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகளும் காலி இடங்களும் : பி.எஸ்.எப்.,பின் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் மரைன் பிரிவில் எஸ்.ஐ.,-மாஸ்டர் பிரிவில் 13 இடங்களும், எஸ்.ஐ.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 13 இடங்களும், எச்.சி.,-மாஸ்டர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.-ஒர்க்-ஷாப் பிரிவில் டீஸல் மெக்கானிக்கில் 3, கார்பெண்டரில் 5, மெஷின்ஸ்டில் 1, ஏ.சி., டெக்னீசியனில் 4, எலக்ட்ரீசியனில் 1, அப்-ஹோல்ஸ்டரில் 1, சி.டி., க்ரூவில் 80 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.